×
STUDENT EXPRESS INDIA
முகப்பு
History
Environment & Ecology
Economy
Polity
Civil Services
Personality
General Studies
Home
Enquiry
பேச்சு வழக்கு சொலவடைகள்
வ. எண்
சொலவடைகள்
1
நான் வாழ்ந்த கீர்த்திய சொல்லுறன் அண்டை வீட்டுக்காரன் நிக்கிரானா பார்
2
கல்யாண வீட்டுப் பந்தக்காலை கட்டிக்கிட்டு அழுவுறவன் எழவு வீட்டை கண்டா விடுவானா
3
அறுவடைக்காலத்துல எலிக்கு அஞ்சிய பெண்டாட்டிகளாம்.
4
ஆயிரம் ரூபா கையில இல்லாததால பத்துரூபா வட்டி நட்டமாப் போச்சின்னானாம்.
5
மொட்டைத்தலையில பேய்பிடிச்சா இருக்கிறத வச்சித்தாம் ஆடணும்.
6
பூனை இருக்கிற வீட்டுலதான் எலி பேரன் பேத்தி பெத்தெடுக்குமாம்.
7
பழையது இருந்தாப் போடு பசிக்காம இருக்க மருந்து தருவேன்னு சொன்னானாம்.
8
துரைகளோடு சொக்கட்டான் ஆடினால் தோத்தாலும் குட்டு செயிச்சாலும் குட்டு
9
ஒரு பணம் தந்து அழச்சொன்னது ஒம்பது பணம் தந்து நிறுத்தும்படி ஆயிட்டது.
10
பூனை சிரிச்சதும் எலி பெண்டுக்கு அழைச்சதாம்!
11
ஊரெல்லாம் சுத்தி, கூடை முறம் பொத்தி, இன்னும் வரவில்லை புத்தி.
12
எருமை வாங்குறதுக்கு முன்னாடி நெய் விலை பேசாதே
13
பிள்ளை பெறுவதற்கு முன்னால் பெயர் வைக்காதே
14
அப்பனுக்கே ஒட்டு கோவணம் இதுல மகனுக்கும் இழுத்துப் போத்து என்றானாம்
15
சுக்குக்கு மேல வைத்தியனும் இல்ல, சுப்பிரமணிக்கு மேல சாமியும் இல்ல
16
கணக்கன் மனைவி கடுக்கன் போட, காரியக்காரன் மனைவி காதை அறுத்துக்கொண்டாளாம்
17
ஒரு பொண்டாட்டிக்காரனுக்கு உறியில சோறு. ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு இடியும் சோறு
18
கர்ணனுக்குப் பின் வள்ளலுமில்லை, தீபத்துக்குப்பின் மழையும் இல்லை
19
கூத்தாடிக்கு கிழக்கே கண், கூலிக்காரனுக்கு மேற்கே கண்
20
சேலை இல்லைன்னு சின்னம்மா வீட்டுக்கு போனா, அவ ஈச்சம்பாய கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்
21
எங்கேயோ போன மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா
22
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்
23
ஆடுற மாட்டை ஆடி கறக்கனும், பாடுற மாட்டை பாடி கறக்கனும்
24
இதயம் ஒரு வெள்ளாடு, அதை எப்போதும் கட்டியே வைத்திருக்க வேண்டும்
25
மொச புடிக்கிற நாயா மூஞ்ச பாத்தா தெரியும்
26
எல்லாம் சொல்லுமாம் பல்லி கழி நீர் பானையில் விழுமாம் துள்ளி
27
மேயுற மாட்டை கெடுத்துச்சாம் நக்குற மாடு
28
கோலம் போட்ட திண்ணையில குத்த வைக்க நேரமில்லை
29
வீட்டை கட்டி பார், கல்யாணத்த பண்ணி பார்
30
அவிசாரி என்று ஆணை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல போக முடியுமா?
31
அழிந்த கொல்லையில குதிரை மேய்ந்தாலென்ன கழுதை மேய்ந்தாலென்ன?
32
ஆடத் தெரியாதவ சொன்னாளாம் மேடை கோணலா இருக்குன்னு
33
அறுக்க மாட்டாதவ இடுப்புல அருவத்தாறு கருக்கருவாளாம்
34
ஆகாதவனுக்கு புள்ள பெத்து காண்டாமிருகமுன்னு பேரு வச்சாளாம்
35
வயித்தெரிச்சல்காரனுக்கு மாலைகண்ணு பொண்டாட்டி
36
அய்யர் வீட்டுல கல்யாணம், அவங்க அவங்க வீட்டுல சாப்பாடு
37
சட்டியில் இருந்தா தான் அகப்பையில் வரும்
38
மயிரை கட்டி மலையை இழு வந்தால் மலை போனா மயிரு
39
இக்கரைக்கு அக்கரை பச்சை
40
யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
41
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை
42
கழுதைக்கு கா துட்டு, விட்டைக்கு முக்கா துட்டு
43
அருமையற்ற வீட்டுல எருமையும் தங்காது
44
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே
45
நண்டு கொழுத்தா வலையில தங்காது
46
எறும்பு ஊற கல்லும் தேயும்
47
அரசன நம்பி புருசன கை விடாதே
48
அழுதாலும் புள்ளையை அவ தான் பெற வேண்டும்
49
கோபுரத்தில் அமர்ந்தாலும் கோட்டானுக்கு தெரியாது பகலில் கண்
50
ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா தான் புள்ள தானா வளரும்
51
ஆசை இருக்கு அரசாள, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க
52
அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தது என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
53
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
54
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது
55
ஆடி காத்துல அம்மியும் பறக்குமாம்
56
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்
57
தேளுக்கு அதிகாரம் கொடுத்தா நிமிசத்துக்கு ரெண்டு தடவ கொட்டுமாம்
58
அடி மேல அடி அடிச்சா அம்மியும் நகரும்
59
காசுக்கு எட்டு சட்டி வாங்கி, சட்டிக்கு எட்டு காசுன்னு வித்தானாம் கெட்டிகாரன்
60
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி
61
இருப்பு அடிக்கிற எடத்துல ஈக்கு என்ன வேலை
62
நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்
63
காடு வா வாங்குது, வீடு போ போங்குது
64
சோறும் சீலையும் கொடுக்காத சின்னாத்தா, வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பி வச்சாளாம்
65
அடைக்க வேண்டியது அடைச்சி, தொடைக்க வேண்டியத தொடைச்சா, கெடைக்க வேண்டியது தானா கெடைக்கும்,
66
பொழைக்க தெரியாதவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறத விட பொழைக்க தெரிஞ்சவனுக்கு வப்பாட்டியா இருக்கலாம்
67
ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது
68
அசைஞ்சு திங்கும் மாடு, அசையாம திங்கும் வீடு
69
சோழியன் குடுமி சும்மா ஆடாது
70
முன்ன பின்ன செத்து இருந்தா தான் சுடு காடு தெரியும்
71
படிச்சு பாழா போறத விட, மாடு மேச்சு மனுசனா ஆகலாம்
72
பாலுக்கு பூனைய காவலுக்கு வச்ச மாதிரி
73
காய் முத்துனா கடை தெருவுக்கு வந்துதான் ஆகணும்
74
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுல போய் ஒளிஞ்சானாம்
75
உரலில் தலையை வச்சிக்கிட்டு உலக்கைக்கு அஞ்சலாமா
76
பகலுல பசு மாடு தெரியல, ராத்திரியில எருமை கண்ணு தெரியுதாக்கும்
77
அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.
78
ஒய்யார கொண்டையாம் தாழம்பூ, உள்ள இருக்குமாம் ஈரும் பேணும்
79
ஆத்துக் கிட்ட கோவிச்சு கிட்டு, கழுவாம இருந்தா எப்புடி
80
வவ்வாலுக்கு வாக்கப் பட்டா, தொங்கி தான் ஆகணும்
81
எழுதாத கணக்கு அழுதாலும் தீராது
82
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்,
83
ஓணான் ஓட்டம் வேலி வரை தான்
84
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு
85
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்
86
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
87
அடாது செய்தவன் படாது படுவான்.
88
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
89
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
90
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
91
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
92
அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
93
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
94
அப்பனே மட்டையப் பிடிச்சு தொங்கிகிட்டு இருந்தானாம், பையன் நல்ல நெத்துக்காயா போடச் சொன்னானாம்.
95
அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
96
அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
97
அருமை சிந்தை, அற்புதம் செய்யும்.
98
அரும மருமவன் தல போனாலும் பரவாயில்ல ஆதிகாலத்து உரல் உடையக்கூடாது.
99
அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்
100
அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
101
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
102
அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
103
அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
104
அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
105
அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
106
அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே.
107
அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும்?
108
அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
109
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
110
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
111
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
112
அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்
113
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
114
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
115
ஆவின் பாலுக்குச் சிங்கி அடித்தவன் அன்னப் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
116
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்
117
ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
118
ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
119
ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
120
ஆடு வளக்குறது அழகுக்கு இல்லை, கோழி வளக்குறது கொஞ்சிக்கிறதுக்கு இல்லை
121
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
122
ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
123
ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
124
ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்து தீனி வாங்க முடியலையாம்!
125
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
126
ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
127
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
128
ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
129
ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்.
130
ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
131
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
132
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
133
இரண்டு வீட்டிலும் கல்யாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
134
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
135
இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே
136
இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்
137
இருட்டுக்கு முந்தி இரவு உணவு
138
இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை?
139
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது
140
இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.
141
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்
142
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு!
143
இரைத்த கிணறு ஊறும், இரையாத கிணறு (கேணி) நாறும்.
144
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
145
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்; தீயோனுக்கு உடலெங்கும் விடம்
146
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
147
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
148
உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
149
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
150
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
151
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
152
உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
153
உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
154
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
155
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை
156
உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
157
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது
158
பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்
159
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
160
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
161
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
162
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு
163
ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே
164
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு
165
எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்
166
எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது
167
எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம்.
168
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
169
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
170
எலி வளை யானாலும் தனி வளை வேண்டும்
171
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
172
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
173
எள் என்றால் எண்ணெயாக நிற்பான்
174
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
175
ஏழைக்கேத்த எள்ளுருண்டை